கனவில் குழந்தையை அனுப்பிய அல்லா
53 வயது முதியவரின் கனவில், 6 வயது சிறுமியை மனைவியாக காட்டிய இறைவன்
முஹம்மது தமக்கு 50 வயதாகும் போது 6 வயது ஆயிஷாவை திருமணம் செய்துக்கொண்டார். முஹம்மதுவின் கனவில் ஒரு தூதன் ஆயிஷா அவர்களை பட்டுத்துணியினால் சுற்றி கொண்டுவந்தாராம், இவள் உங்கள் மனைவி என்றுச் சொன்னாராம். பட்டுத் துணியை விலக்கிப்பார்த்த போது, அது ஆயிஷா என்று முஹம்மது கண்டுக்கொண்டாராம். இதனால் தான், அபூ பக்கரிடம் உங்கள் மகளை திருமணம் செய்துக்கொள்கிறேன் என்று முஹம்மது கூறி, அபூ பக்கரை சமாதானப்படுத்தி திருமணம் செய்துக்கொண்டார். ஒரு கிழவனுக்கு ஒரு பேத்தி வயதில் இருக்கும் ஒரு சிறுமியை உண்மையான இறைவன் கனவில் காட்டுவானா? இது கேவலம் இல்லையா? உண்மையாகவே, அல்லாஹ் கனவில் காட்டினாலும், ஒரு நல்ல தீர்க்கதரிசி என்ன சொல்லவேண்டும்? எனக்கும் அந்த சிறுமிக்கும் இடையே 45 ஆண்டுகள் இடைவெளி உள்ளது, எனவே இப்படி திருமணம்செய்வது கீழ்தரமானது, என்னால் முடியாது என்றுச் சொல்லவேண்டாமா? சில ஆண்டுகளில் நான் மரித்துவிட்டால், இந்த சிறுமி விதவையாகிவிடுவாளே என்றுச் சொல்லி மறுத்து இருக்கவேண்டும். ஆனால், முஹம்மதுவோ ஆயிஷாவை 6 வயதிலே திருமணம் செய்துக்கொண்டு, ஆயிஷா அவர்களுக்கு 18 வயது ஆகும் போது மரித்தும் விட்டார். ஆயிஷா யாரையும் திருமணம் செய்துக்கொள்ளாமல், தன்னுடைய 68வது வயதில் மரித்தார்கள், 50 ஆண்டுகள் விதவையாகவே வாழ்நாளை கடத்தினார்கள் ஆயிஷா. இவரை ஒரு தீர்க்கதரிசி என்று எந்தப் ஒரு மனசாட்சி உள்ள மனிதன் கனவிலும் நினைக்கமாட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி எண்கள் 5125, 7011, 7012 & 5078
5125. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டுள்ளேன். ஒரு வானவர் உன்னைப் பட்டுத் துணியொன்றில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர், 'இவர் உங்கள் (வருங்கால) மனைவி'' என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துணியை விலக்கிப் பார்த்தேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) 'இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்'' என்று சொல்லிக்கொண்டேன். Volume :5 Book :67